அன்பார்ந்த சங்க உறுப்பினர்களே,
வணக்கம்.
வணக்கம்.
நமது தில்லித் தமிழ்ச் சங்கத்தின் செயற் குழுவுக்கான தேர்தல் அடுத்த மாதம் 11ஆம் தேதி — 11-12-2016 — ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பு சங்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் உங்களுக்கும் தகவல் வரக்கூடும்.
அண்மை ஆண்டுகளாக நமது சங்கத்தின் போக்கு ஆரோக்கியமானதாக இல்லை என்பதை நீங்களும் வருத்தத்துடன் கவனித்து வருகிறீர்கள். சங்கச் செயல்பாடுகளில் மாற்றம் தேவை என்பதை நீங்களும் உணர்ந்திருக்கிறீர்கள். கலை, இலக்கியம், பண்பாடு ஆகிய துறைகளிலும் நிர்வாகத்திலும் அனுபவமும் ஈடுபாடும் உள்ளவர்கள் தற்போது தமிழ்ச் சங்கத்துக்குத் தேவைப்படுகிறார்கள் என்பது காலத்தின் கட்டாயம்.
கலையரங்கை வாடகைக்கு விடுவது முதல், வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே நிகழ்ச்சிகளை வழங்குவது வரை என பலவிதமான முறைகேடுகள் நடந்து வருகின்றன. சங்க நிர்வாகச் செயல்பாடுகள், கணக்குவழக்குகள் எல்லாம் ஏதோ ராணுவ ரகசியம்போல சிலரால் திரையிட்டு மறைக்கப்படுகின்றன. குறிப்பிட்ட சிலரே திரும்பத் திரும்ப பதவிக்கு வரும் வகையில் காய்கள் நகர்த்தப்படுகின்றன. சிலர் மட்டும் மேடையேற்றப்படுவார்கள், விளம்பரம் செய்யப்படுவார்கள். அனைத்து வகைகளிலும் தகுதியுள்ள மற்றவர்கள் இருட்டடிக்கப்படுவார்கள். சங்க நிகழ்ச்சிகளில் செயற்குழுவில் இல்லாத சிலருக்குத் தரப்படும் முக்கியத்துவத்தால், இப்போது செயற்குழுவில் உள்ளவர்களும்கூட வேறுவழியின்றி நொந்து கிடக்கிறார்கள் என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
கலையரங்கை வாடகைக்கு விடுவது முதல், வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே நிகழ்ச்சிகளை வழங்குவது வரை என பலவிதமான முறைகேடுகள் நடந்து வருகின்றன. சங்க நிர்வாகச் செயல்பாடுகள், கணக்குவழக்குகள் எல்லாம் ஏதோ ராணுவ ரகசியம்போல சிலரால் திரையிட்டு மறைக்கப்படுகின்றன. குறிப்பிட்ட சிலரே திரும்பத் திரும்ப பதவிக்கு வரும் வகையில் காய்கள் நகர்த்தப்படுகின்றன. சிலர் மட்டும் மேடையேற்றப்படுவார்கள், விளம்பரம் செய்யப்படுவார்கள். அனைத்து வகைகளிலும் தகுதியுள்ள மற்றவர்கள் இருட்டடிக்கப்படுவார்கள். சங்க நிகழ்ச்சிகளில் செயற்குழுவில் இல்லாத சிலருக்குத் தரப்படும் முக்கியத்துவத்தால், இப்போது செயற்குழுவில் உள்ளவர்களும்கூட வேறுவழியின்றி நொந்து கிடக்கிறார்கள் என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
இவ்வாறு திரும்பத்திரும்ப சிலரின் கையிலேயே மீண்டும் அகப்பட்டு விடாமல் சங்கத்தை மீட்க வேண்டியது நமது கடமையாகிறது. வெளிப்படையான நிர்வாகம், உறுப்பினர்களின் கருத்துக்கு மதிப்பளித்தல், ஊழலற்ற செயல்பாடுகள், தமிழுக்கும் தமிழ்க் கலைகளுக்கும் முக்கியத்துவம் தருதல், அனைவருக்கும் சமவாய்ப்பு அளித்தல் உள்ளிட்ட நோக்கங்களுடன் தேர்தலில் போட்டியிட இருக்கிறது சங்கம் 2020 அணி.
டாக்டர் அப்துல் கலாம் கனவுகண்ட இந்தியா 2020 போன்ற கனவுதான் சங்கம்-2020 கனவும். அனைத்து வகையிலும் வலிமையான, அனைவருக்கும் பயன் தருகிற, நாடெங்கும் பெயர் பெற்ற புதிய பொலிவுடன் கூடிய சங்கத்தை நீங்கள் காண வேண்டும். அதுதான் இந்த அணியின் நோக்கம்.
இந்த நோக்கங்கள் அனைத்தும் நிறைவேற உங்கள் மகத்தான ஆதரவை வேண்டுகிறோம். சங்கம்-2020 அணியில் வேட்பாளராகப் போட்டியிடுபவர்கள் யார், அணியின் நோக்கம் என்ன, செயல்திட்டங்கள் என்ன ஆகிய விவரங்கள் அவ்வப்போது இந்த வலைப்பூவில் பதிவேற்றப்படும். தொடர்ந்து வாசித்து வருமாறு வேண்டுகிறோம். நண்பர்களுக்கும் தெரிவிக்குமாறும் வேண்டுகிறோம்.
நன்றி, வணக்கம்.
இந்த நோக்கங்கள் அனைத்தும் நிறைவேற உங்கள் மகத்தான ஆதரவை வேண்டுகிறோம். சங்கம்-2020 அணியில் வேட்பாளராகப் போட்டியிடுபவர்கள் யார், அணியின் நோக்கம் என்ன, செயல்திட்டங்கள் என்ன ஆகிய விவரங்கள் அவ்வப்போது இந்த வலைப்பூவில் பதிவேற்றப்படும். தொடர்ந்து வாசித்து வருமாறு வேண்டுகிறோம். நண்பர்களுக்கும் தெரிவிக்குமாறும் வேண்டுகிறோம்.
நன்றி, வணக்கம்.
Best wishes to Sangam - 2020
ReplyDeleteBest wishes to Sangam - 2020
ReplyDeleteAll the best Sangam-2020 .we are looking for a change !
ReplyDeletevenkat